தேர்தல் செய்திகள்

உ.பி.யில் கச்சத்தீவு பற்றி பேசுகிறார் மோடி: மு.க. ஸ்டாலின்

ஆரணி வேட்பாளரை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்.

DIN

தோல்வி பயத்தில் பிரதமர் நரேந்திர மோடி உளறுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர், குழப்பத்தில் உள்ள பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தில் கச்சத்தீவு பற்றி பேசுகிறார். தோல்வி பயத்தில் மோடி உளறுகிறார்.

அமலாக்கத் துறை, வருமான வரித் துறையுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. பாஜக ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும்.

சமூகநீதி காக்க ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அரசியல் சட்டம் காக்க, பன்முகத்தன்மை காக்க பாஜக அரசு முதலில் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.

தமிழகத்துக்கு மத்திய அரசு 5 ஆயிரம் கோடி தந்தது சர்வதேச வங்கிகள் வழங்கிய கடன் தொகையைத்தான். தமிழகத்திற்கு நிதியைத் தராமல், மோடியைப் போன்று நிர்மலா சீதாராமனும் வாயால் வடை சுடுகிறார். கந்துவட்டிக்காரரைப் போல கணக்கு கேட்கிறார்.

அண்மையில் பிரதமரின் நேர்காணலைப் பார்த்தேன். பார்க்க நகைப்பாக இருந்தது.

அமலாக்கத் துறைக்கும் தனக்கும் தொடர்பில்லை என பிரதமர் மோடி பொய் கூறுகிறார். அவரின் இந்தப் பேச்சைக் கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

10 ஆண்டில் தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்த சிறப்புத் திட்டங்கள் என்னென்ன என்பதற்கு மோடியிடம் பதில் இல்லை என மு.க. ஸ்டாலின் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

பாஜகஉறவு முறிந்தது! கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அணி அறிவிப்பு!-பண்ருட்டி ராமச்சந்திரன்

அறிவுசார் திட்டம் என்றாலே ஆக்கிரமிப்பு! ஆற்றுப்படுகையில் எதற்கு அரசின் திட்டங்கள்?அன்புமணி பேச்சு!

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

இந்த வார ஓடிடி படங்கள்!

SCROLL FOR NEXT