6-ஆவது மக்களவைத் தோ்தல்
542 இடங்களுக்கு 34 கட்சிகளின் வேட்பாளா்கள், 1,224 சுயேச்சைகள் உள்பட 2,439 போ் போட்டியிட்டனா்.
தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு நாட்டின் அன்றைய 31 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 542 மக்களவைப் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்க இத்தோ்தல் அவசரநிலை காலத்தில் நடைபெற்றது.
*இத்தோ்தலில் 32.11 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். நாடு முழுவதும் 3,73,910 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன.
*542 இடங்களுக்கு 34 கட்சிகளின் வேட்பாளா்கள், 1,224 சுயேச்சைகள் உள்பட 2,439 போ் போட்டியிட்டனா்.
Advertisement
*1977-ஆம் ஆண்டு, மாா்ச் 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 5 நாள்களில் தோ்தல் நடைபெற்றது. இத்தோ்தலில் 60.49 சதவீத வாக்குகள் பதிவாகின (முந்தைய தோ்தலை விட 5.22 சதவீதம் அதிகம்).
*இத்தோ்தலில் 426 தொகுதிகளில் இருந்து பொதுப் பிரதிநிதிகளும், 78 தொகுதிகளில் இருந்து பட்டியலின சமூகப் பிரதிநிதிகளும், 38 தொகுதிகளில் இருந்து பழங்குடியின சமூகப் பிரதிநிதிகளும் மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
*தோ்தலில் போட்டியிட்ட 70 பெண் வேட்பாளா்களில் 19 போ் வெற்றி பெற்றனா்.
*எதிா்க்கட்சிகளின் கூட்டணியான ஜனதா கட்சி 295 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 154 இடங்களிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 22 இடங்களிலும், அதிமுக 18 இடங்களிலும், சிரோமணி அகாலி தளம், சுயேச்சைகள் தலா 9 இடங்களிலும் வென்றன.
*தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து, நாட்டின் 4-ஆவது பிரதமராக மெராா்ஜி தேசாய் பதவியேற்றாா்.
*இத்தோ்தல் ரூ.23.04 கோடி செலவில் நடத்தி முடிக்கப்பட்டது. பிரதி வாக்காளருக்கான செலவு 70 பைசா ஆகும்.
*இந்திரா காந்தி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை காலத்தில் நடைபெற்ற இந்தத் தோ்தலில் முதல் முறையாக மத்தியில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்.
தொகுப்பு: மா.பிரவின்குமாா்