வரலாறு காணாத வீழ்ச்சியில் பங்குச்சந்தை!
தேர்தல் முடிவுகள் எதிரொலியால் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருவதால் பங்குச்சந்தை இன்று கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது.
பங்குகளின் விலை வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் ஏறத்தாழ ரூ.40 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளனர்.
திங்கள்கிழமை சந்தை முடிவில் ரூ.426 லட்சம் கோடியாக இருந்த பிஎஸ்இ நிறுவனங்களின் மூலதனம் இன்றைய வர்த்தக ரூ.384 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் 76,285.78 புள்ளிகளுடன் துவங்கிய சென்செக்ஸ் 6000 புள்ளிகள் வரை இறக்கமடைந்து வர்த்தக இறுதியில் 4,389.73 புள்ளிகள் குறைந்து 72,079.05-ல் நிறைவடைந்தது. நிஃப்டியும் வர்த்தக இறுதியில் 1379.4 புள்ளிகளை இழந்து 21,884.50-ல் நிறைவடைந்தது.
இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் அதிக புள்ளிகளை இழந்து தேசிய பங்குச்சந்தை பெரிய தடுமாற்றத்தை அடைந்துள்ளது.
இதில், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ, அதானி எண்டர்பிரைசர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனப் பங்குகளின் விலை கடுமையாக குறைந்துள்ளது.