விழுப்புரம்: விழுப்புரம் மக்களவைத்(தனி) தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இயக்குநர் மு.களஞ்சியம் செவ்வாய்க்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சி. பழனியிடம் இயக்குநர் மு. களஞ்சியம் தனது மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முன்னதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக ஆட்சியரகம் வந்தடைந்தனர். இதைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய 5 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
விழுப்புரம் தொகுதியில் இதுவரை மொத்தம் எட்டு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.