நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு! இலவசங்கள் இல்லை!
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடயிருப்பது குறித்து...
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை(மார்ச் 18) வெளியிடவுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நாளை காலை 10 மணிக்கு தேர்தல் அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் நாம் தமிழர் கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.
Advertisement
Advertisement
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 23 தொகுதிகளிலும், காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் சேர்த்து 28 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை சீமான் முன்னதாக அறிவித்திருந்தார்.
சொந்த மண்ணிலிருந்து குரல் கொடுக்கவே வருகிற சட்டபேரவைத் தேர்தலில் காரைக்குடித் தொகுதியில் போட்டியிடப்போவதாக சீமான் தெரிவித்திருந்தார்.
மேலும், “நாங்கள் தேர்தல் அறிக்கை வெளியிட மாட்டோம். எங்களது ஆட்சி எப்படி இருக்கக் போகிறது என்பதற்கான செயல்முறையைத்தான் வெளியிடுவோம்” என்று சீமான் தெரிவித்திருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை மீது மக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாழ் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் இருக்காது எனவும் விவசாயத் துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்த முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The party's chief coordinator, Seeman, will release the election manifesto of the Naam Tamilar Party tomorrow (March 18).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.