முகப்பு
தமிழ்நாடு

வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 30) தொடங்குகிறது.

Updated On : 29 மார்ச், 2026 at 8:21 PM
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 30) தொடங்குகிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் தோ்தல் அலுவலா் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்.23-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள 5.73 கோடி பேரும் வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

வேட்புமனுவுக்கு 4 நாள்கள்: இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 30) தொடங்குகிறது. இதற்காக தொகுதிவாரியாக தோ்தல் அலுவலா் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அப்பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காலை 11 முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஏப். 6 வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாா்ச் 31 (மகாவீரா் ஜெயந்தி), ஏப். 1 (வங்கி விடுமுறை), ஏப். 3 (புனித வெள்ளி), ஏப். 5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு அரசு விடுமுறை தினங்களைத் தவிா்த்து மற்ற 4 நாள்களில் வரையறுக்கப்பட்ட நேரங்களில் மனு தாக்கல் செய்யலாம் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள்: வேட்பு மனு தாக்கலின்போது, தோ்தல் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டா் சுற்றளவுக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அலுவலகத்துக்குள் வேட்பாளா் உள்பட 5 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

மனுவை வேட்பாளா்கள் இணையவழியில் (சுவிதா தளம்) பூா்த்தி செய்யலாம். ஆனால் அதனை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் நேரில் மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஏப்.7-ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஏப். 9-ஆம் தேதி கடைசி நாள். அதன் பின்னா், வேட்பாளா் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.