முகப்பு
தமிழ்நாடு

திருவண்ணாமலை அதிமுக மாவட்டச் செயலா் நீக்கம்: எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்துள்ளாா்.

Updated On : 29 மார்ச், 2026 at 8:54 PM
எடப்பாடி பழனிசாமி - படம் - அதிமுக
பகிர்:

அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை விடுத்த அறிக்கை: அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்கு முறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவைக்கப்படுகிறாா்.

அதிமுகவினா் யாரும் அவருடன் எவ்விதத் தொடா்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.