ஏர்இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏர்இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட் (AIATSL) நிறுவனதில் நிரப்பப்பட உள்ள 345 செக்யூரிட்டி ஏஜெண்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்கள் நேரடி நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: செக்யூரிட்டி ஏஜெண்ட்
வயதுவரம்பு: 01.12.2016-ஆம் தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சான்றிதழ் படிப்பு அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 06.12.2016 - 09.12.2016-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: புதுடெல்லியில் உள்ள ஏர்இந்தியா விமான நிறுவனத்தின் கம்யூனிட்டி சென்டரில் நடைபெறுகிறது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindia.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.