வேலைவாய்ப்பு

மத்திய அரசில் 623 பணி: ஸ்டாப் செலக்சன் கமிஷன் அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள குரூப்-பி மற்றும் குரூப்-சி 623 பணியிடங்களுக்கான அறிவிப்பை ‘ஸ்டாப் செலக்சன் கமிஷன்’ எனப்படும்

VASUDEVAN.K

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள குரூப்-பி மற்றும் குரூப்-சி 623 பணியிடங்களுக்கான அறிவிப்பை ‘ஸ்டாப் செலக்சன் கமிஷன்’ எனப்படும் மத்திய அரசு அலுவலர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் 8 துறைகளில் சீனியர் ரிசர்ச் அசிஸ்டன்ட், சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணிகளுக்கு 20 பேரும், வடகிழக்கு மண்டலத்தில் பல்வேறு பணிகளுக்கு 102 பேரும், வடமேற்கு மண்டலத்தில் 171 பேரும், கே.கே.ஆர் எனப்படும் கர்நாடக, கேரள மண்டலத்தில் 51 பேரும், கிழக்கு மண்டலத்தில் 279 பேர் என மொத்தம் 623 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கு பிளஸ்-2, டிப்ளமோ, பட்டம், பட்டமேற்படிப்புகள் என அனைத்து தரப்பு படிப்பை முடித்தவர்களுக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த பணிக்கான வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்,

முன்னாள் படைவீரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தகுதி உடையவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 26.09.2016-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

மேலும் முழுமையான விரங்களை அறிய www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT