வேலைவாய்ப்பு

சவூதி மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

தினமணி

சவூதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிய விரும்பும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், டெக்னீசியன்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் என். சுப்பையன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சவூதி அரேபியாவில் உள்ள முன்னணி மருத்துவமனையில் அவசர மருத்துவம், மகளிர் மகப்பேறு மருத்துவம், தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சை, பொது மருத்துவம் ஆகிய பிரிவுகளில் அலோபதி மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். இதேபோல, செவிலியர்கள், எக்ஸ்ரே டெக்னீசியன்கள், ஆய்வக உதவியாளர்கள், பெண் மருத்துவப் பிரிவு டெக்னீசியன்கள் தேவைப்டுகின்றனர்.

இந்தப் பணிக்கான நேர்முகத் தேர்வு எர்ணாகுளத்தில் வரும் 7, 8 தேதிகளில் நடைபெறழுள்ளது. எர்ணாகுளம், குண்டனூர் சந்திப்பு, புறவழிச் சாலையில் அமைந்துள்ள கிரௌன் பிளாசா ஹோட்டலில் காலை 9 மணி முதல் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

நேர்முகத் தேர்வுக்கு வரும் நபர்கள், தங்களது சுய விவரங்கள், கல்வி, அனுபவம், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) நகல்களுடன், 3 புகைப்படம், விண்ணப்பம் ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும்.

இலவச உணவு, இருப்பிடம், விமான டிக்கெட், குடும்ப விசா மற்றும் சவூதி அரேபிய அரசின் சட்டத் திட்டத்திற்குள்பட்ட இதர சலுகைகள் வேலையளிப்போரால் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com  என்ற இணையதள முகவரியிலோ அல்லது 044-22505886, 22502267, 22500417 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT