வேலைவாய்ப்பு

ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் காலியாக உள்ள Air Traffic Contriller Trainees பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்


பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் காலியாக உள்ள Air Traffic Contriller Trainees பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Air Traffic Contriller Trainees

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000 

வயதுவரம்பு: 19.12.2018 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், ஐடி, தகவல்தொடர்பு அறிவியல், கணினி சிஸ்டம், மென்பொருள் பொறியியல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்சட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வும் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: பெங்களூரு.

பயிற்சி அளிக்கப்படும் இடம்: அலகாபாத் அல்லது ஹைதராபாத்தில் உள்ள ஏர்போர்ஸ் அகடமியில் பயிற்சி அளிக்கப்படும்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.34,690 உதவித்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.hal-india.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://hal-india.co.in/Common/Uploads/Resumes/961_CareerPDF1_Advertisement%20ATC%20Trainees%2028112018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT