வேலைவாய்ப்பு

கடற்படையில் செய்லர் வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆர். வெங்கடேசன்

இந்திய கடற்படையில் காலியாக காலியாக உள்ள 2500 செய்லர் பணிக்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Sailor (Senior Secondary Recruit (SSR))

காலியிடங்கள்: 2500

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
 
வயதுவரம்பு: 01.08.1998க்கும் - 31.07.2002க்கும் இடைப்பட்ட தேதிக்குள் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் படித்து பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ உயரமும், மார்பளவு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதி: 7 நிமிடங்களில் 1.6 கி.மீ தூரத்தை ஓடி கடக்க வேண்டும். மேலும் கடற்படை வீரருக்கு ஏற்ற ஆரோக்கியமான உடற்தகுதி மற்றும் தெளிவான பார்வை திறனும் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கடற்படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற் தகுதி திறன் தேர்வு, மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும். ஆங்கிலும், அறிவியல், கணிதம் மற்றும் பொது அறிவு பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.205. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT