50 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
சென்னையில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் நிரப்பப்பட உள்ள பெருக்குபவர் மற்றும் துப்புரவுப் பணியாளர் பணியிடங்களுக்கான
சென்னையில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் நிரப்பப்பட உள்ள பெருக்குபவர் மற்றும் துப்புரவுப் பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பும், தகுதியும் உள்ள 30 வயதிற்குள் இருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: பெருக்குபவர் (Sweeper)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
பதவி: துப்புரவுப் பணியாளர் (Sanitary Worker)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,00
Advertisement
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மேற்கண்ட 2 பதவியிடங்களுக்கும் ஆரோக்கியமான உடல்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.assembly.tn.gov.in என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தற்போது எடுக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து அதனை விண்ணப்பத்துடன் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: செயலாளர், சட்டப் பேரவைச் செயலகம், தலைமைச் செயலகம், சென்னை - 600 009
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.assembly.tn.gov.in/pressrelease/recruitment_sweeper_sanitaryworker_280918.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.10.2018