மு.க. ஸ்டாலின்தான் மீண்டும் முதல்வர்: செல்வப்பெருந்தகை
தமிழ்நாட்டில் பாசிசத்துக்கும் மதவாதத்துக்கும் இடமில்லை என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு
தமிழகத்தில் மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலினே அமர்வார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் செல்வப்பெருந்தகை பேசியதாவது, "திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள், 200 தொகுதிகளுக்குமேல் வெற்றி பெறுவோம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் அமர்வார். எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
பிரதமர் மோடி இங்கு வந்தால் - தமிழர் நாகரிகம், தமிழர் பாரம்பரியம், தமிழர் பண்பாடு, தமிழர் கலாசாரம் என்று சொல்வார். ஆனால், பிகார் தேர்தலின்போது தமிழர்களைத் திட்டுவார். ஒரிஸாவில் தமிழர்கள் திருடர்கள், ஒரிஸாவின் கருவூல சாவி தமிழரான பாண்டினிடம் இருக்கிறது என்றெல்லாம் சொல்வார்.
Advertisement
மாற்றிமாற்றி பேசுபவர்தான் நம்முடைய பிரதமர். பாசிசத்துக்கும் மதவாதத்துக்கும் எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் இடமில்லை. அவர்கள்தான் படுதோல்வியைத் தழுவப்போகின்றனர்" என்று தெரிவித்தார்.