வேலைவாய்ப்பு

இன்றைய வேலைவாய்ப்பு செய்தி: ரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை

சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப தகுதியும் விருப்பமும்

ஆர். வெங்கடேசன்


சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 18

பணி: அலுவலக உதவியாளர்

வயதுவரம்பு: 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகைகள் கோருபவர்களுக்கு நடைமுறையில் அரசு ஆணைகள் அரசு விதிமுறைகளின் படி செயல்படுத்தப்படும்.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

விண்ணப்பிக்கும் முறை: வரையறுக்கப்பட்ட வடிவில் விண்ணப்பத்தை தயாரித்து முழுமையாக பூர்த்தி செய்து அத்துடன் கல்வி, சாதி மற்றும் பிற சான்றிதழ்களின் நகலில் சுயசான்றொப்பமிட்டு தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை பதவித்தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிபதி, தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், எழும்பூர், சென்னை - 600 008. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.03.2019 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/OA%20Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT