வேலைவாய்ப்பு

காவல்துறை சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு!

தினமணி


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் குழுமம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகைப் பிரிவு) பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

காவல்துறை சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வானது கடந்த டிசம்பர் மாதம் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வு சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மையங்களில் நடைபெற்றது. இதில், 22 ஆம் தேதி நடந்த காவல் துறையை சேர்ந்தவர்களுக்கான எழுத்துத் தேர்வில் 2,608 பேரும், 23 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பொதுத்தேர்வர்களுக்கான எழுத்துத் தேர்வில் 34,933 பேரும் தேர்வு எழுதினர்.

இந்தத் தேர்வின் முடிவுகள் www.tnusrbonline.org  என்ற இணையத்தளத்தில் இன்று சனிக்கிழமை (ஜன.5) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மேற்கண்ட இணையதள முகவரியில் சென்று தேர்வாளர்கள் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT