வேலைவாய்ப்பு

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை வேண்டுமா? 

ஆர். வெங்கடேசன்


தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சென்னை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் காலியாக உள்ள மூத்த ஆலோசகர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், ஆலோசகர் உள்ளிட்ட பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பிடுவதற்கான அறிவிப்பை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (TNSDMA) 

பணி: Senior Consultant (Disaster Management)

தகுதி: M.A Sociology, M.Sc Geography, M.A Social Work, M.Sc Agriculture, M.Arch Engineering, M.A Disaster Management, M.E மற்றும் சம்மந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Consultant (Disaster Management)
பணி: Consultant (Disaster Management)  
 
தகுதி: M.A Sociology, M.A Social Work, M.Sc Agriculture, M.Arch Engineering, M.A Disaster Management, M.A Geography, M.E மற்றும் சம்மந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் 

பணி: Data Entry Operator
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 35 முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnsdma.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://tnsdma.tn.gov.in/Pages/view/recruitments என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.11.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT