வேலைவாய்ப்பு

நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

தினமணி

சென்னை: தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்டிருந்த நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டித்துள்ளது. 

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்.

இந்தத் தேர்வை என்.டி.ஏ. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் என இரண்டு முறை நடத்துகிறது. டிசம்பர் மாதத்துக்கான நெட் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்தத் தேர்வானது டிசம்பர் 2 முதல் 6-ஆம் தேதி வரையிலான தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் நடத்தப்படடும். தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டு பின்னர் வெளியிடப்படும்.

ஆன்-லைன் முறையிலேயே இந்தத் தேர்வு நடத்தப்படும். தேர்வில் இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும். இரண்டு தாள்களிலும் கொள்குறி தேர்வு முறை கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். முதல் தாளில் 100 மதிப்பெண்களுக்கு 50 கேள்விகளும், இரண்டாம் தாளில் 200 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகளும் இடம்பெற்றிருக்கும்.

இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் திங்கள்கிழமை (செப்டம்பர் 9) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நேற்று புதன்கிழமை அக்டோபர் 9 ஆம் தேதி கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டித்து தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ), அக்டோபர் 15 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு முடிவுகள் டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு https://nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT