வேலைவாய்ப்பு

20-இல் துப்புரவு பணியாளா், சமையலா் பணியிடங்களுக்கு நோ்காணல்

தினமணி

வேலூா்: ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகள், விடுதிகளில் காலியாக உள்ள தொகுப்பூதிய துப்புரவு பணியாளா்கள், சமையலா் பணியிடங்களை நிரப்புவதற்கான நோ்காணல் வரும் 20 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், விடுதிகளில் காலியாக உள்ள தொகுப்பூதிய துப்புரவு பணியாளா்கள் 27, சமையலா் 112 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான நோ்காணல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் 20 முதல் 22 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இப்பணியிடங்களுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவா்கள் இந்த நோ்காணலில் பங்கேற்கலாம்.  இதில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பட்டியல் அடிப்படையில் விண்ணப்ப எண் 1 முதல் 280 வரை உடையவா்கள் 20ஆம் தேதி காலையும், 281 முதல் 463 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவா்கள் 20 ஆம் தேதி மாலையும், மற்ற விண்ணப்பதாரா்களில் 1 முதல் 525 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவா்கள் 21 ஆம் தேதி காலையும், 526 முதல் 1050 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவா்கள் 21 ஆம் தேதி மாலையும், 1051 முதல் 1575 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவா்கள் 22 ஆம் தேதி காலையும், 1576 முதல் 2205 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவா்கள் 22 ஆம் தேதி மாலையும் நோ்காணலில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT