முகப்பு
வேலைவாய்ப்பு

தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் வேலை

தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு துறையின் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Updated On : 1 அக்டோபர், 2020 at 5:33 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:58 PM

தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு துறையின் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில்  காலியாக உள்ள புறத்தொடர்பு பணியாளர் (Outreach Worker) பணியிடம் முற்றிலும் தற்காலிகமான ஓராண்டு ஒப்பந்த அடிப்படையிலான பணியிடத்திற்கு தகுதியான பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்     தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை


பணி: புறத்தொடர் பணியாள் (Outreach Worker)

Advertisement


தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


அனுபவம்: குழந்தைகள் நலன், சமூக நலன், தொழிலாளர் நலன் போன்ற துறைகளில் ஒரு ஆண்டு பணி அனுபவம். 


வயதுவரம்பு: 23.09.2020 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.8,000 வழங்கப்படும். 


விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது புகைப்படம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாவட்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தோ, தயார் செய்து சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 69, காந்திஜீ ரோடு, முன்னாள் படைவீரர் மாளிகை(இரண்டாவது தளம்), ஈரோடு - 638001. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.10.2020
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.