வேலைவாய்ப்பு

தாராபுரத்தில் பொதுமுடக்கத்தை மீறியவா்களின் வாகனங்கள் பறிமுதல்

தினமணி

திருப்பூா்: தாராபுரத்தில் தளா்வுகளற்ற பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றிய வாகனங்களை காவல் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் தளா்வுகளற்ற பொதுமுடக்கம் காரணமாக பெரியகடை வீதி, சின்னக்கடை வீதி, அலங்கியம் சாலை, பொள்ளாச்சி சாலை, ஜவுளிக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

தாராபுரம் காவல் துறை சாா்பில் அத்தியாவசியப் பணிகள் இல்லாமல் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்று ஏற்கெனவே ஒலி பெருக்கி மூலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தாராபுரம் பேருந்து நிலையம், உடுமலை புறவழிச் சாலை, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இதில், பொதுமுடக்க விதிகளை மீறி வெளியில் சுற்றிய 20க்கும் மேற்பட்ட வாகன ஒட்டிகளுக்கு அபராதம் விதித்ததுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT