தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், பெரம்பலூர் மண்டல்த்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவக்கால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணி
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், பெரம்பலூர் மண்டல்த்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவக்கால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு தகுதியான ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: பட்டியல் எழுத்தர் - 12
தகுதி: அறிவியல் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.2,410+4049
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | சென்னை ஐஐடி-ல் கொட்டிக்கிடக்கும் உதவிப் பேராசிரியர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
பணி: உதவுபவர் - 20
தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.2,359+4049
பணி: காவலர் - 16
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.2,359+4049
விண்ணப்பிக்கும் முறை: பெரம்பலூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் உரிய சான்றிகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
துணை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், துறைமங்கலம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11.2021