'செபி' நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?
இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான (செபி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான (செபி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Securities and Exchange Board of India
மொத்த காலியிடங்கள்: 120
பணி: Assistant Manager (Officer Grade A)
1.General Stream - 80
2. Legal Stream - 16
3. Information Technology Stream - 14
4. Research Stream - 07
5. Official Language Stream - 03
வயது வரம்பு: 31.12.2022 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய அரசில் 7,500க்கும் அதிகமான குரூப் 'பி', 'சி' வேலைவாய்ப்புகள்
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்டமான ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம்.
விண்ணப்பிக்கும் முறை: www.sebi.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.01.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.sebi.gov.in/sebiweb/other/careerdetail.jsp?careerId=199 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | பேரிடர் மேலாண்மை மையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?