மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் காலியாக உதவி துணை ஆய்வாளர், தலைமை காவலர் பணியிடங்களுக்கான வேலைவாப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assitant Sub-Inspector(ASI)(Stenographer)
காலியிடங்கள்: 104
சம்பளம்: மாதம் ரூ. 29,200 - 92,300
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதி அதை நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Head Constable(Ministerial)
காலியிடங்கள்: 355 (ஆண்கள் 319, பெண்கள் 36)
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 165 செ.மீ உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 82 செ.மீ இருக்க வேண்டும். பெண்கள் 155 செ.மீ உயரம் இருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வங்கியில் வேலை வேண்டுமா..? எஸ்பிஐ வங்கியில் 1,673 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணங்கள் வரவேற்பு!
தேர்வு செய்யப்படும் முறை: சிஐஎஸ்எப் ஆல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cisfrectt.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | மிஸ் பண்ணிடாதீங்க... பட்டதாரிகளுக்கு ஆர்பிஐ-இல் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.10.2022
மேலும் விவரங்கள் அறிய www.cisfrectt.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.