வேலைவாய்ப்பு

தொலையுணர்வு செயற்கைக் கோள் ஆய்வு மையத்தில் வேலை: முதுகலை பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

இஸ்ரோவின் கீழ் செயல்படும் தொலையுணர்வு செயற்கைக் கோள் ஆய்வு மையத்தில் காலியாக உள்ள 72 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

இஸ்ரோவின் கீழ் செயல்படும் தொலையுணர்வு செயற்கைக் கோள் ஆய்வு மையத்தில் காலியாக உள்ள 72 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.NPSC-RMT-2/2024

பணி: Research Scientist

காலியிடங்கள்: 20

சம்பளம்: மாதம் ரூ.56,100

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Remote Sensing, Geo information,Geology,Applied Geology, Botany, Forestry, Ecology, Civil Engineering போன்ற ஏதாவதொன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Project Scientist

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.56,100

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Remote Sensing, Geo information, Computer Science பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Project Associate

காலியிடங்கள்: 15

சம்பளம்: மாதம் ரூ.31,000 - 35,100

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Remote Sensing, Geo information பாடப்பிரிவில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Junior Research Fellow

காலியிடங்கள்: 27

சம்பளம்: மாதம் ரூ.37,000 - 42,000

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Civil Engineering, GIS, Meteorology, Atmospheric Science, Physics, Geo Physics, Chemical Sciences போன்ற ஏதாவதொரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வு ஹைதராபாத்தில் நடைபெறும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nrsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.4.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

தவெக மாநாடு! இரும்புக் கம்பிகளுக்கு கிரீஸ் தடவுவதை ஆச்சரியத்துடன் பார்க்கும் தொண்டர்கள்

பேளூரில் சுவாமி ஊர்வலத்தில் மோதல்: பொதுமக்கள் சாலை மறியல்!

அமெரிக்காவில் எரிபொருள் நிரப்ப ரூ.2.20 கோடி ரொக்கமாக கொடுத்தாரா புதின்? அவசியம் ஏன்?

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்குத் தடையில்லை! - உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT