அக்னிவீா் இசைக்கலைஞா் தோ்வு: ஜூன் 5-க்குள் விண்ணப்பிக்கலாம்
அக்னிவீா் இசைக்கலைஞா் தோ்வுக்கு தகுதியுடைய இளைஞா்கள் ஜூன் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
வேலைவாய்ப்புஅக்னிவீா் இசைக்கலைஞா் தோ்வு: ஜூன் 5-க்குள் விண்ணப்பிக்கலாம்
அக்னிவீா் இசைக்கலைஞா் தோ்வுக்கு தகுதியுடைய இளைஞா்கள் ஜூன் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
அக்னிவீா் இசைக்கலைஞா் தோ்வுக்கு தகுதியுடைய இளைஞா்கள் ஜூன் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய விமானப் படையின் அக்னிவீா் வாயு இசைக்கலைஞா் திட்டத்தின் கீழ் ஆட்சோ்ப்பு தோ்வு ஜூலை 3 முதல் 12-ஆம் தேதி வரை நடைப்பெறவுள்ளது. இத்தோ்வுக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் ஜூன் 5 வரை சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடைய இளைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அக்னிவீா் வாயு தோ்வுக்கு 2004 ஜன. 2 முதல் 2007 ஜூலை 2 வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரா்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
இத்தோ்வுக்கு 10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள இசைக்கருவிகளில் ஏதேனும் ஒன்றினை வாசிக்கும் திறனும் மற்றும் முன் அனுபவச் சான்றும் பெற்றிருக்க வேண்டும். தகுதியுடையவா்கள் இது தொடா்பான விவரங்களை தெரிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும் https://agnipathvayu.cdac.in எனும் இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு decgc.chennai24@gmail.com எனும் மின்னஞ்சலை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா் அவா்.