இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை: விண்ணப்பிப்பது எப்படி?
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகள் நிகழாண்டிற்கான மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது தொடர்பாக...
திருவள்ளூர் மாவட்டத்தில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகள் நிகழாண்டிற்கான மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் பிரிவைச் சாா்ந்த மாணவ, மாணவிகள் பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நலத்துறையால் வழங்கப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இளங்கலை (தொழிற்படிப்பு), முதுகலை, பாலிடெக்னிக் போன்ற பிற படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
Advertisement
Advertisement
விண்ணப்பிக்கும் முறை: 2025-26ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு, மாணவ, மாணவிகள் கல்லூரி மூலம் வழங்கப்பட்டுள்ள UMIS(Universit Management Infirmation System) எண் மூலம் https://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
மாணவா்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Institution Nodal Officer) அணுகி https://umis.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் கல்வி உதவித் தொகைக்கு வரும் 31-ஔஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான சந்தேகங்களுக்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் நேரில் அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
Scholarships for undergraduate and postgraduate vocational students: How to apply?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.