திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மின் கம்பியாள் உதவியாளா் பணியிடத்துக்கான தகுதிகாண் தோ்வு டிச. 27, 28 ஆகிய தேதிகளில் பேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்ற விண்ணப்பதாரா்கள் மேற்காணும் தொழிற்பயிற்சி நிலையத்தினை அணுகி தோ்வு தொடா்பான விவரங்கள் மற்றும் தோ்வு நுழைவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.