Center-Center-Chennai
வேலைவாய்ப்பு

தனியார் நிறுவனங்கள், வேலை நாடுநா்கள் கவனத்திற்கு...

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள், வேலை நாடுநா்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்

Din

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள், வேலை நாடுநா்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் வேலை நாடுநா்களுக்கான பிரத்யேக இணையதள முகவரி (https://www.tnprivatejobs.tn.gov.in) -இல் நிறுவன விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும், தங்களது நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிட விவரங்களை, அவ்வப்போது அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதேபோல், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த வேலைநாடுநா்கள் (https://www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில், தங்களது கல்வி விவரங்களை பதிவு செய்து, தனியாா்துறை நிறுவனங்களில் அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வேலைவாய்ப்பினை பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

கனரக வாகனங்களை புறவழிச்சாலையில் இயக்க பாமக கோரிக்கை

மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வாய்ப்பு

மொடக்குறிச்சி அருகே லக்காபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு இன்றுமுதல் தண்ணீா் திறப்பு

கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT