திருச்சி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் 
வேலைவாய்ப்பு

இந்து அறநிலையத் துறையில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

திருச்சி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்து சமய அறநிலைய சட்ட விதிகளுக்கு உட்பட்டு பணி நியமனம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: இளநிலை உதவியாளர்

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

பணி: கூர்க்கா

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

தகுதி: தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

பணி: திருவலகு

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

தகுதி: தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

பணி: கால்நடை பரமாரிப்பாளர்

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

தகுதி: தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

பணி: பெரிய சன்னதி உடல்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600

பணி: பெரிய சன்னதி வீரவண்டி

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600

தகுதி: தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும் மற்றும் யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப் பள்ளிகளில் இருந்து இது தொடர்பான சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.

பணி: பெரிய சன்னதி சோமக்கலம் மற்றும் இதர வாத்தியங்கள்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600

தகுதி: தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும் மற்றும் யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப் பள்ளிகளில் இருந்து இது தொடர்பான சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.

பணி: தாயார் சன்னதி வீரவண்டி மற்றும் இதர வாத்தியங்கள்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ. 18,500 - 58,600

தகுதி: தகுதி: தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும் மற்றும் யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப் பள்ளிகளில் இருந்து இது தொடர்பான சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.

பணி: உதவி யானைப்பாகன்

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800

தகுதி: தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும் மற்றும் யானைக்கு பயிற்சி அளித்து, கட்டுப்படுத்தி, வழிநடத்தும் திறனுடன் யானைக்கு கட்டளையிட்டு கட்டுப்படுத்துவதற்கான மொழியை பேசும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: சலவையாளர்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800

தகுதி: தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

பணி: கூட்டுபவர்

காலியிடங்கள்: 7

சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500

தகுதி: தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்து மதத்தைச் சார்ந்த 18 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.

பணியிடங்களின் எண்ணிக்கை பதவி உயர்வு, பணி ஓய்வு உள்ளிட்ட நிர்வாக காரணங்களுக்காக மாறுதலுக்கு உட்பட்டதாகும்.

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது எவ்வித குற்றவியல் நடவடிக்கை இல்லை என்ற சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்களால் வழங்கப்படும் சான்றிதழ்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் அதன் உண்மை தன்மை குறித்து பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: திருக்கோயிலின் https://srirangamranganathar.hrce.tn.gov.in என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: "இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி 620006".

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 25.11.2025

விண்ணப்பப் படிவம் மற்றும் இதர நிபந்தனைகளை அலுவலக வேலை நேரங்களில் தெரிந்து கொள்ளலாம். அல்லது https://srirangamranganathar.hrce.tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

Trichy Srirangam Ranganatha swamy Temple recruitment notification to fill the 31 Junior Assistant...post

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாய் கிரிசில்டாவின் மிரட்டலின் பேரில் திருமணம் நடந்தது! - மாதம்பட்டி ரங்கராஜ்

பறவைகளில் அவள் மணிப்புறா... கீர்த்தி ஷெட்டி!

ஓசையின்றிப் பூ பூக்கும்... ராஷி கன்னா!

கடலோரம்... ரகுல் பிரீத் சிங்!

சமாளிப்புகளைவிட ஆடையின் விலை அதிகம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT