முகப்பு
வேலைவாய்ப்பு

வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலியாகவுள்ள மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பாக...

Updated On : 16 நவம்பர், 2025 at 2:11 PM
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் வேலை
பகிர்:

புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டும் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலியாகவுள்ள மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: MSME Relationship Managers

காலியிடங்கள்: 30

வயது வரம்பு: 25 முதல் 33-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சந்தையியல், நிதியியல் பிரிவில் எம்பிஏ முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.850. இதர அனைத்து பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://punjabandsind.bank.in என்ற இணையதளம். மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.11.2025

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

PSB RECRUITMENT OF MSME RELATIONSHIP MANAGER ON CONTRACTUAL BASIS IN THE BANK

முழு கட்டுரையைப் படிக்க →