நபார்டு வங்கியில் வேலை: பட்டதாரி இளைஞர்களுக்கு வாய்ப்பு!
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் (நபார்டு) 162 மேம்பாட்டு உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பாக...
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் (நபார்டு) 162 மேம்பாட்டு உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Development Assistant (Group ‘B’) – 159
பணி: Development Assistant (Hindi) (Group ‘B’) – 3
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 162(தமிழ்நாடு-9)
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.32,000
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மூலம் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மொழித்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அந்தந்த மாநிலத்தின் வட்டார மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்டி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.100, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.550 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.2.2026
NABARD Bank Recruitment 2026 apply for 162 Development Assistant Posts
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.