முகப்பு
அரசுப் பணிகள்

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... 800 கள மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 800 கள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 5 டிசம்பர், 2022 at 2:59 PM
பகிர்:


பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 800 கள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிப்பு எண். CC/09/2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

Advertisement

பணி: Field Engineer (Electrical) - 50
பணி: Field Engineer (Electronics & Communication) - 15 
பணி: Field Engineer (IT) - 15
பணி: Field Supervisor (Electrical) - 480 
பணி: Field Supervisor (Electronics & Communication) - 240

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பொறியியல் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட சம்மந்தப்பட்ட துறையில் பட்டயம், பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்:    Field Engineer (Electrical/E&T/IT) பணியிடங்களுக்கு ரூ.400. 
Field Supervisor (Electrical/E&C) பணியிடங்களுக்கு ரூ.300 செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.powergrid.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.12.2022

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.