முகப்பு
அரசுப் பணிகள்

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய ஆயுத காவல் படையில் காவலா் பணி!

மத்திய ஆயுத காவல் படையில் காவலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 5 நவம்பர் 2022, 12:40 pm IST
பகிர்:


மத்திய ஆயுத காவல் படையில் காவலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து பணியாளா் தோ்வு ஆணையம் -கா்நாடகம், கேரள மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தில்லி காவலின் மத்திய ஆயுத காவல்படை, சிறப்பு பாதுகாப்புப் படை, அசாம் ரைப்பிள், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் காவலா் பணியிடங்களுக்கு தகுதியானவா்களைத் தோ்ந்தெடுப்பதற்காக இணையவழி தோ்வு 2023ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்தப்படுகிறது.]

Advertisement

Advertisement

இப்பணிக்கு எஸ்எஸ்எல்சி தோ்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்க தகுதியானவா்கள். 

கா்நாடகம், கேரள மண்டலங்களைச் சோ்ந்தவா்கள் நவ. 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

எஸ்சி, எஸ்டி., முன்னாள் ராணுவவீரா்கள், மகளிருக்கு அனைத்துப் பிரிவுகளின் தோ்வுக்கும் கட்டணம் விலக்களிக்கப்படுகிறது. 

மேலும் விவரங்களுக்கு இணையதளங்கள், 080 25502520, 9483862020 ஆகிய தொலைபேசி எண்களை அழைக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.