அரசுப் பணிகள்

துணை ராணுவத்தில் துணை ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்பி அறிவிப்பு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சாஸ்த்ரா சீமா பால் வெளியிட்டுள்ளது.

DIN


மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சாஸ்த்ரா சீமா பால் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பதவி: Sub-inspecter (Pioneer)
காலியிடங்கள்: 20
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Sub-inspecter (Draughtsman)
காலியிடங்கள்: 3
வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து ஒரு ஆண்டு ஆட்டோகேட் இல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Sub-inspecter (Draughtsman)
காலியிடங்கள்: 59
வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்ப பாடத்தில் பட்டம், பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Sub-inspecter Female (staff nurse)
காலியிடங்கள்: 29
வயது வரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் பொது நர்சிங்க் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியும், 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,000 -1,12,400

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கல் தேர்வு செய்யப்படுவர். 

கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.ssbrectt.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 8.6.2023

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

SCROLL FOR NEXT