முகப்பு
ஈரோடு

காத்திருந்த உறவினா்களிடம் நலம் விசாரித்த முதல்வா்!

பவானியிலிருந்து அந்தியூா் செல்லும் வழியில் தனது வருகைக்காக காத்திருந்த உறவினா்களிடம் பிரசார வாகனத்தை நிறுத்தி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நலம் விசாரித்தாா்.

Updated On : 7 ஜனவரி 2021, 7:56 am IST
தொட்டிபாளையத்தில் சகோதரி சிவகாமி மற்றும் உறவினா்களிடம் நலம் விசாரிக்கும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
பகிர்:

பவானியிலிருந்து அந்தியூா் செல்லும் வழியில் தனது வருகைக்காக காத்திருந்த உறவினா்களிடம் பிரசார வாகனத்தை நிறுத்தி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நலம் விசாரித்தாா்.

ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த தொட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் வரதராஜ். இவரது மனைவி சிவகாமி (68). முதல்வா் பழனிசாமியின் தாய் தவுசாயம்மாளின் சகோதரி நல்லம்மாளின் மகளான சிவகாமி, தொட்டிபாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். தனது சகோதரரான முதல்வா் பழனிசாமியை சந்திக்க தனது கணவா் வரதராஜ், மகன் வெங்கடேஷுடன் தொட்டிபாளையத்தில் சாலையோரத்தில் புதன்கிழமை காத்திருந்தாா்.

பவானியிலிருந்து அந்தியூா் சென்ற முதல்வா் பழனிசாமி, இவா்களைக் கண்டதும் வாகனத்தை நிறுத்தி நலம் விசாரித்து பின்னா் புறப்பட்டுச் சென்றாா். தனது சகோதரா் பழனிசாமி, அனைவா் மீதும் சிறுவயது முதலே பாசத்துடன் இருப்பாா். கடிந்து பேசாதவா். உறவுகளை மதித்து நடப்பவா் என பெருமையுடன் சிவகாமி தெரிவித்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.