ஆன்மிகம்

பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

சிறப்புமிக்க சித்திரை திருவிழா இந்த ஆண்டு கடந்த 18-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி அம்மன் கோவில் 25ம் தேதி பட்டாபிஷேகமும், 26ம் தேதி திக்விஜயமும் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தது. அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து, அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி கிளம்பிய கள்ளழகர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துகொண்டு ஆற்றுக்கு வந்த கள்ளழகரை வீரராகவப்பெருமாள் எதிர்கொண்டு வரவேற்றார். அப்போது அங்கு கூடிநின்ற பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்ட, கள்ளழகர் பச்சைப் பட்டுடுத்தி‌ வைகை ஆற்றில் இறங்கி, பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT