பகல்பத்து உற்சவத்தின் முதல் நாள் நிகழ்ச்சியில், கவரிமான் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் மிகவும் புகழ்பெற்றது.திருக்கோயிலில், ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா குறிப்பிடத்தக்கது.பகல்பத்து, ராப்பத்து இயற்பா என 21 நாள்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகுந்த ஏகாதசி பகல்பத்து உற்சவம் சனிக்கிழமை தொடங்கியது.இந்த ஆண்டுக்கான வைகுந்த ஏகாதசி பகல்பத்து உற்சவத்துக்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.வைகுந்த ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான சனிக்கிழமை அர்ஜூன மண்டபத்தில் கவரிமான் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் காட்சியளித்தார் நம்பெருமாள்.கவரிமான் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்துடன் தங்க கிளியும் ரத்தின அபயஹஸ்தத்துடனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கவரிமான் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்துடன் தங்க கிளியும் ரத்தின அபயஹஸ்தத்துடனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வைகுந்த ஏகாதசி பகல்பத்து உற்சவத்தை முன்னிட்டு, கோயில் உள்பிராகாரம் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.கோயில் உள்பிரகாரத்தில் வலம் வரும் நம்பெருமாள்.வெகு விமரிசையாகத் தொடங்கியது வைகுந்த ஏகாதசி பகல்பத்து உற்சவம்.நம்பெருமாளை ஏராளமான பக்தர்கள் வணங்கிச் சென்றனர்.தங்க கிளியுடன் ரத்தின அபயஹஸ்தம், கலிங்கதுரா, பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, புஜ கீர்த்தி, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள்.