தங்க முலாம் பூசப்பட்ட தங்க கலசங்களில் புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்தினர்.கும்பாபிஷேக விழாவிற்காக முருகப்பெருமானுக்கு பிரமாண்டமான முறையில் யாகசாலை அமைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது.யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமையன்று தொடங்கி இன்று (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு நடைபெற்றது.ஆசி வழங்க வானத்தில் வட்டமிட்ட கருடர்கள்.கோவிலின் வாசல் மூடப்பட்ட நிலையிலும், வெளியே நின்றபடி குடமுழுக்கு விழாவைக் கண்டு களித்த பக்தர்கள்.அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், நன்கொடையாளர்கள், உபயதாரர்கள் என குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டுமே கோவிலுக்குள் அனுமதி வழங்கப்பட்டது.சிறப்பாக நடைபெற்ற குடமுழுக்கு விழா.பக்தர்கள் முருகனுக்கு அரோகரா அரோகரா என முழக்கமிட்டு குடமுழுக்கு விழாவை சிறப்பாக தரிசனம் செய்தனர்.