முகப்பு
ஆன்மிகம்

ஒப்பிலியப்பன் கோயிலில் குடமுழுக்கு விழா - புகைப்படங்கள்

தமிழகத்தின் திருப்பதி என போற்றப்படும் திருவிண்ணகரப்பன் பூமிதேவி நாச்சியார் சமதே வேங்கடாசலபதி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு, வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 29 ஜூன், 2023 at 7:28 PM
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோயிலில் மகா குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக இன்று (29-06-2023) நடைபெற்றது.
பகிர்:
ஒப்பிலியப்பன் கோயிலில் மகா குடமுழுக்கு விழாவில், கலசத்துக்கு பூஜை செய்த பட்டாச்சாரியார்கள்.
மூலவர் சன்னதியில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
வேத மந்திரங்கள் முழங்க ராஜ கோபுர விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Advertisement

தமிழக திருப்பதி என அழைக்கப்படும் இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோயில் பூலோக வைகுந்தம், திருவிண்ணகர் என போற்றப்படுகிறது.
மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இத்தலம் திருவேங்கடம் என்றும், திருப்பதியைப் போலவே பல்வேறு வகைகளில் பெரியதொரு பிரார்த்தனை தலமாகவும் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.