தூங்கா நகரம், கோயில் நகரம், திருவிழா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி திருக்கல்யாண வைபவமும், அழகர் ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் நடைபெறும்.
பகிர்:
Updated On : 23 ஏப்ரல், 2024 at 6:08 PM
அழகர் மலையிலிருந்து மதுரை வந்து, வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்துவிட்டு, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த பிறகு மீண்டும் அழகர் மலைக்குத் திரும்பும் வரை மதுரை மக்களின் நினைப்பு அழகரை சுற்றியே இருக்கும்.
Updated On : 23 ஏப்ரல், 2024 at 6:09 PM
Advertisement
தண்ணீரை நிரப்பி பீய்ச்சி அடித்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்.
Updated On : 23 ஏப்ரல், 2024 at 6:10 PM
அழகர்மலையிலிருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு கண்டாங்கி பச்சை பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி தங்கப்பல்லக்கில் அருள் பாளிக்கும் கள்ளழகர்.
Updated On : 23 ஏப்ரல், 2024 at 6:10 PM
தங்கை மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் காண அழகர்மலையிலிருந்து இறங்கி மதுரைக்கு வந்த கள்ளழகர் பெருமான்.
Updated On : 23 ஏப்ரல், 2024 at 6:10 PM
தங்கக் குதிரை வாகனத்தில் அமர்ந்தவாறே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய கள்ளழகர்.
Updated On : 23 ஏப்ரல், 2024 at 6:10 PM
கோவிந்தா கோஷத்தில் தங்க குதிரையில் பச்சை நிற பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.
Updated On : 23 ஏப்ரல், 2024 at 6:10 PM
அழகர் மீது தண்ணீரை பாய்ச்சியும் கோவிந்தா கோஷங்களை எழுப்பியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பக்தர்கள்.
Updated On : 23 ஏப்ரல், 2024 at 6:10 PM
மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு வெகு விமிரிசையாக நடைபெற்றது.
Updated On : 23 ஏப்ரல், 2024 at 6:10 PM
தான் கட்டும் பட்டு மூலம் நாட்டில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை உணர்த்திவிடுவார் கள்ளழகர்.
Updated On : 23 ஏப்ரல், 2024 at 6:10 PM
கள்ளழகர் வருகையால் மதுரை மாநகரம் மகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்கியது.
Updated On : 23 ஏப்ரல், 2024 at 6:10 PM
வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்பார்.
Updated On : 23 ஏப்ரல், 2024 at 6:10 PM
தங்கக்குதிரையில் கள்ளழகர்.
Updated On : 23 ஏப்ரல், 2024 at 6:10 PM
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் கண்கொள்ளா காட்சியை கான பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுவர்.