முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு நாள் - புகைப்படங்கள்
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி டெல்லியில் அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் நரேந்திர் மோடி, அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. அருகில் பிரதமர் நரேந்திர மோடிவாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர். அருகில் பிரதமர் நரேந்திர மோடி.மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Advertisement
Advertisement
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மறைவையொட்டி, அவரது வளர்ப்பு மகள் நமிதா மற்றும் அவரது கணவர் ரஞ்சன் பட்டாச்சார்யா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர்.