அதிக ஒலியெழுப்பும் பறவைகளில் மயிலும் ஒன்று. சாதாரண நாட்களைவிட, மழைக் காலங்களில் அதிக முறை ஒலியெழுப்பும்.இந்தியாவின் தேசிய பறவை என இதற்கு மணிமகுடம் சூட்டப்பட்டுள்ளது.மேகங்கள் திரண்டு, மழை வரும் போது மட்டுமே, மயில்கள் தோகையை விரித்து ஆடுவது வழக்கம்.மயில்களுக்கு அழகான நீண்ட தோகை இருந்தாலும், நெடும் தூரம் பறக்க இயலாது. தன்னை ஆபத்திலிருந்து காத்துக்கொள்ளவே பறக்கின்றன.மயில்கள் அடர்ந்த காடுகளில் வாழுவதில்லை. அவை குறைந்த மரங்கள் கொண்ட நிலப்பரப்பிலேயே வாழுகின்றன.மயிலின் தோகை, நாம் பார்க்கும் கோணத்துக்கு ஏற்ப வெவ்வேறு நிறங்களை எதிரொளிக்கும்.மீன்கள் மட்டுமன்றி தவளைகள், பூச்சிகள் மற்றும் எலிகளை வேட்டையாடித் தின்று விவசாயிகளுக்கும் பயனுள்ள ஒரு பறவையாக கொக்குகள் விளங்குகின்றன.நீரில் அசையாமல் நின்றபடி காத்திருந்து இரையைப் பிடிக்கும்.வக் வக் என சத்தமிடும் கொக்கு.குளங்கள், கண்மாய்கள் மற்றும் ஏரிகளில் தாவரங்கள் நிரம்பிய பகுதிகளில் இவற்றைக் காணலாம்.பின்னி பிணையும் கொக்கு.கொக்கு வகையைச் சோ்ந்த இந்த பறவை அழிந்து வரும் பறவைகள் இன பட்டியலில் உள்ளது.குரங்குகளின் செயல்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் பல நிலைகளில் மனிதர்களுடன் ஒத்துப் போகின்றன.மனிதனை போல சேட்டை செய்யும் திறமை குரங்குகளுக்கு உண்டு.தாழ்வான மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் கிங்ஃபிஷர் பறவை.உணவு தேடும் கிங்ஃபிஷர்.கூடு கட்டுவதற்கு நீர் நிலையை ஒட்டிய உயரமான தென்னை, பனை, வேம்பு, முட்கள் நிறைந்த மரங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் பறவைகள்.ஆண்பறவை தான் கூடு கட்டும். காய்ந்த புல், வைக்கோல் , நீண்ட இலைகள் போன்றவற்றை சேகரித்து வந்து கூடு கட்டும்.காற்று வீசும் திசையை கணித்து அதற்கேற்ப கூண்டின் குடுவைப்பகுதியும் , நீண்ட பகுதியும் அமைக்கப்படும்.ஆந்தையின் பார்வை திறன் அதிகம் என்பதால் அதனால் வெகு தொலைவில் இருக்கும் இரையை கூட தெள்ள தெளிவாக பார்க்க முடியும்.புலிகள் பெரும்பாலும் மறைவிடம், அதிகம் இரை உள்ள நீர்நிலைகளின் அருகில் காணப்படும்.புலிகள் பாலூட்டி வகையை சேர்ந்தது. புலிகள் மாமிசம் மட்டுமே உண்ணும்.புலிகள் நன்கு நீந்துபவை. மேலும் ஒரே தாவலில் 20 முதல் 30 அடி முன்னோக்கி பாயும் திறன் கொண்டது புலி.