கடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் 30 நிமிடம் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அவர் நடை பயணம் மேற்கொண்ட இடங்களில் சிதறி கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை வெறும் கைகளால் அகற்றினார். சுத்தம் செய்யும் படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.