முகப்பு
நிகழ்வுகள்

விவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
தில்லியில் டிராக்டர் பேரணியின்போது செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அங்கே உள்ள கோபுரம் ஒன்றின் மீது அவர்கள் கொண்டு வந்த கொடியைப் பறக்கவிட்டனர்.
பகிர்:
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது விவசாயிகளின் டிராக்டர் பேரணி.
செங்கோட்டையை அடைந்த விவசாயிகள்.
செங்கோட்டை முன்பு கையில் வாளுடன் தோன்றிய விவசாயி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
பல விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட பாதையைப் பின்பற்றினர். இதில் சிலர் அனுமதிக்கப்படாத வழித்தடங்களில் சென்றனர்.
பல இடங்களில் விவசாயிகளைக் கலைக்க காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.
காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் விவசாயிகளைக் கலைத்தனர்.
பல பகுதிகளில் விவசாயிகளுக்கும் காவல் துறைக்கும் மோதல் ஏற்பட்டதால் தில்லியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
டிராக்டரில் அமர்ந்து தடைகளைத் தகர்த்து முன்னேறும் விவசாயி.
கையில் வாளை ஏந்தி முன்னேறும் விவசாயி. தில்லியில் நடைபெறும் வன்முறையால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளின் போராட்டத்தால் தில்லிக்கு வரும் அனைத்து சாலைகளும் சீல் வைக்கப்பட்டள்ளன.
பல பகுதிகளில் விவசாயிகளுக்கும் காவல் துறைக்கும் மோதல் ஏற்பட்டதால் தில்லியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
போராட்டத்தின்போது டிராக்டரில் இருந்து விழுந்து ஒரு விவசாயி உயிரிழப்பு.
விவசாயிகளைக் கலைக்க காவல் துறை பயன்படுத்திய கண்ணீர் புகைக் குண்டுகள்.
விவசாயிகளைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகளை வானத்தை நோக்கி சுடும் போலீஸார்.
தடைகளைத் தகர்த்து முன்னேறும் விவசாயிகள்.
தில்லிக்குள் நுழையும் பிரதான எல்லைகளான சிங்கு, திக்ரி, காசிபூர் வழியாக லட்சக்கணக்கான விவசாயிகள் தடைகளை அகற்றி பேரணியைத் தொடங்கினர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் கல்லெறியும் பெண்.
போராட்டத்தில் அடித்து நொறுக்கப்பட்டும் பேருந்துகள்.
சிங்கு எல்லையின் ரிங் சாலையில் காவல் துறையினரின் தடைகளைத் தகர்த்து முன்னேறியதால் பூ தூவி வரவேற்கும் சக விவசாயிகள்.
முழு கட்டுரையைப் படிக்க →