முகப்பு
நிகழ்வுகள்

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நடந்து சென்று ஆய்வு செய்ததோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
கனமழையால் பூவிருந்தவல்லி நகராட்சி, அம்மன் தெரு, காவலர் குடியிருப்பில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு, மழைநீரை அகற்றிட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு.
பகிர்:
ஆவடி மாநகராட்சி, திருமுல்லவாயல், கணபதி நகரில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின். உடன் அமைச்சர் நாசர், ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.
கனமழையால் பாதிக்கப்பட்ட பூவிருந்தவல்லி நகராட்சி, அம்மன் தெரு, காவலர் குடியிருப்பில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
ஆவடி மாநகராட்சி, ஸ்ரீராம் நகரில் கனமழை காரணமாக வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, ஆவடி மாநகராட்சி. மூர்த்தி நகர் பூவிருந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையோர கடையில் தேநீர் அருந்திய முதல்வர்.
முழு கட்டுரையைப் படிக்க →