ஆரூரா, தியாகேசா என்ற பக்தி கோஷம் விண்ணைப் பிளக்க, பச்சைக் கொடி அசைய, கீழவீதியிலிருந்து மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் ஆடி அசைந்தபடி புறப்பட்ட ஆழித்தேர். 
விழாக்கள்

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் - புகைப்படங்கள்

நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ள திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி பெருவிழாவையொட்டி இன்று (மார்ச் 15-ஆம் தேதி) காலை சிறப்பு பூஜைகளுடன் தேரோட்டம் தொடங்கியது. ஆரூரா, தியாகேசா என்ற பக்தி கோஷம் விண்ணதிர முழக்கமிட்டு, பச்சைக் கொடி அசைய, கீழவீதியிலிருந்து மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் ஆடி அசைந்தபடி புறப்பட்டது ஆழித்தேர்.

DIN
ரிஷபக் கொடி உச்சியில் பறந்தபடி சென்ற ஆழித்தேர்.
ஆகமவிதிகளின்படி, பங்குனி ஆயில்ய நட்சத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெற்றது.
சைவ பீடங்களில் தலைமை பீடமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்குகிறது.
ஆசியாவிலே மிக பெரியதேர் என அழைக்கப்படும் திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தின் ஆழித்தேரோட்டம், வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆசியாவிலே மிக பெரியதேர் என அழைக்கப்படும் ஆழித்தேர் அசைந்தாடி வரும் அழகை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை.
ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்

ஒடிஸாவில் மோசமான வானிலை: முதல்வா் பயணித்த விமானம் தரையிறங்க முடியாததால் பரபரப்பு

ஜிஎஸ்டி குறைப்பின் பயன் நுகா்வோருக்கு முழுமையாகக் கிடைப்பதை அரசு கண்காணிக்கும்: வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்

4-ஆவது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவா் தற்கொலை

நாட்டில் இதய நோய்களால் 31% போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT