இந்திய அரசியல்வாதிகள் பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் போது தங்கள் முகபாவனைகள் குறித்து மிகுந்த தன்னுணர்வுடன் இருப்பார்கள். இல்லா விட்டால் கேலிச்சித்திரக்காரர்களின் கையில் அகப்பட்டு மறுநாள் பத்திரிகைகளில் கார்டூன்களாகி விடும் அபாயம் இருப்பதால் அப்படி ஒரு கவனம். அவர்களில் அருண் ஜேட்லி அதைக் குறித்தெல்லாம் கவலைப்படாத ஆளுமையாக இருந்திருக்கிறார் என்பது அவரது தன்னிச்சையான இந்த முகபாவனைகளில் வெளிப்படுகிறது.