வேளாண் சட்டங்களுக்கு எதிரான பொது வேலை நிறுத்தம் - புகைப்படங்கள்
DIN
பட்டியாலாவில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் போது பதாகைளை எரித்து ஆதங்கத்தை வெளிப்படுத்திய விவசாயிகள்.வெறிச்சோடி காணப்பட்ட ஆசாத்பூர் பழ சந்தை.அமிர்தசரஸில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு, நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை ஆதரித்து பனிமனையில் பேருந்துகள் இயக்காமல் நிறுத்தி வைப்பு.குவாஹட்டியில், வெறிச்சோடி காணப்பட்ட கணேஷ்குரி ஃப்ளைஓவர்.வெறிச்சோடிய ஆசாத்பூர் பழ சந்தையில் உறங்கும் தொழிலாளி.அமிர்தசரஸ் ரயில் நிலையத்திற்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்ட காவல் துறையினர்.மும்பையில் வெறிச்சோடிய தாதர் சந்தை.தானேவில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே, விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்.சி.பி) தொண்டர்கள்.வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு நடைபெற்ற பைக் பேரணி.கொல்கத்தாவில் 'ரயில் ரோகோ' போராட்டத்தில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சியினர்.சிக்மகளூர் தேசிய நெடுஞ்சாலையில் கொடியை ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள்.தில்லியில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக பதாகை ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்ட அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள்.அமிர்தசரஸில் விவசாயிகள் ஆதரவாக நடைபெற்ற பைக் பேரணி.