20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் ஒரு லட்சம் புலிகள் இருந்தன.புலிகள் அழிவுக்கு வேட்டையாடுதலும் அதன் வாழ்விடம் சுருங்கியதும் முக்கிய காரணமாக தெரியவந்துள்து.உணவு சங்கிலியில் முக்கிய பங்கு வசிக்கும் புலிகளின் எச்சங்கள் தான் பூஞ்சை காளான்களை உருவாக்கி பல்லுயிர் பெருக்கத்திற்கு வழி வகுக்கின்றன.சில காலத்துக்கு முன்பு புலிகளை வேட்டையாடுவது என்பது பெருமைக்குரிய ஒன்றாக இந்தியாவில் இருந்து உள்ளது.இந்தியாவில் ஆங்கிலேயர்களால், புலிகள் கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டன.இந்தியாவில் புலிகள் வேட்டை தடை செய்யப்பட்டுள்ளது.21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புலிகளின் எண்ணிக்கை, ஆயிரங்களாக குறைந்தது.இந்தியா முழுவதும் புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பிறகு புலிகளின் எண்ணிக்கை சற்று உயரத் தொடங்கியது.மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளில் புலிகள் சரணாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.